தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - இபிஎஸ்

by Staff / 07-07-2024 04:08:56pm
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - இபிஎஸ்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "காவல்துறையை கண்டு யாரும் அச்சப்படுகிற சூழல் இல்லை. ஆட்டை வெட்டுவது போல, மனித உயிர்களை சர்வ சாதாரணமாக வெட்டி சாய்க்கின்றனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்" என்று பேட்டியளித்துள்ளார்.

 

Tags :

Share via