"அரசியல் தலைவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்"

by Staff / 07-07-2024 04:14:47pm

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நெல்லையில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டார். சேலத்தில் முன்னாள் மண்டல குழுத் தலைவர் கொலை செய்யப்பட்டார். தற்போது, பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார். நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொலையில் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை" என்று பேட்டியளித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories