ரூ.3 லட்சம் நிவாரணம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

by Staff / 17-06-2024 02:44:43pm
ரூ.3 லட்சம் நிவாரணம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மண்டபம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை சேர்ந்த IND-TN-11-MM-110 என்ற பதிவெண் கொண்ட இயந்திர மீன்பிடி படகில் கடந்த 15.6.2024 அன்று கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக மீன்பிடி படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதால், மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களில் ஆரோக்கியம் (50) பரக்கத்துல்லா (45), கலீல் ரஹ்மான் (32) ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via