இஸ்ரேலில் இருந்து 286 பேருடன் டெல்லி வந்தது 5வது விமானம்
இஸ்ரேலில் நடைபெற்று வரும் போரை அடுத்து அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர இந்திய அரசு ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் ஏற்கனவே 4 விமானங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியா வந்துள்ளனர். ஐந்தாவது விமானம் 286 பயணிகளுடன் நேற்றிரவு டெல்லி வந்தது. அவர்களில் 18 நேபாளிகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களை டெல்லி விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். மேலும், நேபாள குடிமக்களை மீட்டுக் கொண்டு வந்ததற்காக இந்திய அரசுக்கு நேபாள தூதர் நன்றி தெரிவித்துள்ளார்.
Tags :