பாட்டி சடலத்தின் முன்பு சிரித்த முகத்துடன் போட்டோ எடுத்துக்கொண்ட குடும்ப உறுப்பினர்கள்

by Editor / 27-08-2022 11:27:45am
பாட்டி சடலத்தின் முன்பு சிரித்த முகத்துடன் போட்டோ எடுத்துக்கொண்ட குடும்ப உறுப்பினர்கள்

அலப்பறைகளுக்கு அளவில்லை என்பார்கள் அதனை மெய்பிக்கும் வகையில் துக்கவீட்டில் திருமண வீட்டில் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பது போல சிரித்தபடி சர்ச் பாதர்கள் புடைசூழ போஸ்கொடுத்த குடும்பத்தினரால் பரப்பரப்பு ஏற்பட்டது.ஆமாங்க  கேரள மாநிலம் கோட்டயத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.உயிரிழந்த 95 வயது மூதாட்டியின் உடலுக்கு முன்பு குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை எய்திய  மூதாட்டி மரியம்மா வர்கீஸ்க்கு 95 வயது இவருக்கு 9 பிள்ளைகள்உள்ளனர்,இவர்களுக்கு  19 பேரப்பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கிறார்கள்.
பாட்டி இறப்புக்கு வந்த அனைவரும் அனைவரும் ஒன்றுகூடிய நிலையில் குடும்ப ஒற்றுமையை நினைவுக்கு கொண்டுவரும் வண்ணம்  பாட்டி சடலத்தின் முன்பு குரூப் போட்டோ எடுத்துள்ளனர்.

 

Tags :

Share via