தண்டவாளத்தில் ஓட்டை.. ரயிலை நிறுத்தி காப்பாற்றிய சிறுவன்

by Staff / 24-09-2023 11:26:31am
தண்டவாளத்தில் ஓட்டை.. ரயிலை நிறுத்தி காப்பாற்றிய சிறுவன்

மேற்குவங்கத்தின் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த முர்செலிம் (10) என்ற சிறுவன் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளான். முர்செலிம் வெள்ளிக்கிழமை பிற்பகல் மீன்பிடிக்கச் சென்றபோது உள்ளூர் ரயில் தண்டவாளத்தின் கீழ் ஒரு பெரிய ஓட்டை இருப்பதைக் கண்டுள்ளான். அப்போது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த காஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் முன்பு தான் அணிந்திருந்த சிவப்பு சட்டையை கழற்றி காட்டியுள்ளான். உடனே ரயிலை நிறுத்திய லோகோ பைலட் தண்டவாளத்தில் இருந்த ஓட்டையை பார்த்து சிறுவனை வாழ்த்தினார். மேலும், சிறுவனின் சமயோஜித செயலை ரயில்வே துறையினர் பாராட்டினர்.

 

Tags :

Share via