எரிபொருள் கிடங்கில் விபத்து... 34 பேர் பலி
நைஜீரிய எல்லையை ஒட்டிய பெனினில் நிகழ்ந்த கோர விபத்தில் 34 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு பெனின் நகரமான செம் போட்ஜியில் உள்ள கடத்தல் எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தால் வானத்தில் கரும் புகை கிளம்பியது. சம்பவத்தில் பலரது எரிந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த விபத்தில் மேலும் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் இருவர் கைக்குழந்தைகள் எனத் தெரிகிறது. இந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
Tags :