சாலையில் தூங்கிய 80 வயது முதியவர் பலாத்காரம்

by Staff / 17-06-2024 03:10:14pm
சாலையில் தூங்கிய 80 வயது முதியவர் பலாத்காரம்

உத்திரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகேவுள்ள நாம்நேர் சந்திப்பில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த 80 வயது முதியவரை, குடிபோதையில் இருந்த இளைஞர் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த முதியவர் கூச்சலிடவே அந்த போதை இளைஞன் வலுக்கட்டாயமாக தனது ஆசையை தணித்துக் கொண்டான். சத்தம் கேட்டு வந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த கொடூரத்தைப் பார்த்துள்ளார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட முதியவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via