மயிலாடுதுறையில் அன்பகம் அறிவகம் ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்திற்கு வி.கே சசிகலா வருகை
மயிலாடுதுறையில் அன்பகம் அறிவகம் ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்திற்கு வி.கே சசிகலா வருகை. இரண்டு கைகளும் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்த மாணவி லட்சுமியை நேரில் சந்தித்து பாராட்டு.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறுகையில் அ திமுக பொதுச் செயலாளராக போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு நான் ஏற்கனவே பொதுச் செயலாளர் தான் அவர்கள்தான் சண்டை போடுகிறார்கள்.அதிமுக பொன்விழா ஆண்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
திமுக அரசு தேர்தலில் அளித்த பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். எதிர்க்கட்சி என்று சொல்பவர்கள் தற்போது உட்க்கட்சிக்குள்ளே சண்டை போடுவதால் வருகின்ற தேர்தலில் பொதுமக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் என்று கேள்வி எழுப்பினார்
Tags :