திருக்குறளை தேசிய நூலாக்க நடவடிக்கை - மதிமுக அறிக்கை

by Staff / 07-04-2024 12:19:36pm
திருக்குறளை தேசிய நூலாக்க நடவடிக்கை - மதிமுக அறிக்கை

மதிமுக தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் நேற்று (ஏப்ரல் 6) வெளியிட்டார். அதில், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி முறை நிலவ வேண்டும். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும். புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யவும், சுங்கச்சாவடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்தப்படும். நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிட வலியுறுத்தப்படும் என்பன உள்ளிட்ட 74 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

 

Tags :

Share via