தமிழறிஞர் இரா.இளங்குமரனார் காலமானார்.
தமிழறிஞா் புலவா் இரா. இளங்குமரனார் 94வது வயதில் மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இளங்குமரனார் தமிழாசிரியர், நூலாசிரியா், பதிப்பாசிரியா், தொகுப்பாசிரியா் மற்றும் இதழாசிரியா் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டவர். திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் 1927ஆம் ஆண்டு பிறந்த இளங்குமரனார், திருநகரில் உள்ள அரசுப் பள்ளியில் 1946ஆம் ஆணடு தமிழ் ஆசிரியராக தமது தமிழ் பணியை தொடங்கினார். சென்னை பல்கலைக்கழகத்தில் 1951ஆம் ஆண்டு புலவா் தேர்வில் முதல் வகுப்பில் தோச்சி பெற்றார்.
இளங்குமரனார் எழுதிய 'திருக்கு கட்டுரைத் தொகுப்பு' எனும் நூலை 1963ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் நேரு வெளியிட்டார். 'சங்க இலக்கிய வரிசையில் புானூறு' எனும் நூலை 2003ஆம் ஆண்டு குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாம் வெளியிட்டார். இளங்குமரனார் 500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தமிழகமெங்கும் பல்வேறு ஆராய்ச்சி படிப்பு பயின்று வரும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் உதவிகளையும், தமிழ்வழி திருமணங்களையும் நடத்தி வைத்தவர்.
Tags :