இயங்காத குவாரியில் கனிமவளம் திருட்டு-மக்கள் மலைமேல் ஏறி போராட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூர் கிராமம் அருகே உள்ள மலைப்பகுதியில் மணல் குவாரி மற்றும் கல் குவாரிகள் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாகவும் கடந்த 8 மாத காலமாக அளவில்லாமல் கனிம வளங்கள் திருடப்பட்டு வருவதாகவும் இது சம்பந்தமாக அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கனிம வளங்களை திருடும் நபர்களுக்கு எப்போதும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை மிரட்டுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுப்போம் என உறுதியளிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்து மலைமீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags : Mineral theft in a non-functioning quarry-People climb the mountain and struggle