தெருநாய் கடித்து உயிரிழந்த சிறுவன்.. ரூ.5 லட்சம் நிதியுதவி

by Staff / 24-08-2023 05:36:31pm
தெருநாய் கடித்து உயிரிழந்த சிறுவன்.. ரூ.5 லட்சம் நிதியுதவி

தெருநாய் கடித்து உயிரிழந்த கேரளாவின் மலப்புரம் செளம்பிராவைச் சேர்ந்த முஹம்மது ரசான் குடும்பத்துக்கு கேரள அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. ரியாஸ், ராணியா தம்பதியரின் மகன் முகமது ரஸான் (12) என்பவரை கடந்த மே மாதம் தெருநாய் கடித்துள்ளது. தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்குச் சென்று தடுப்பூசியும் போடப்பட்டது. 28 நாட்களுக்குப் பிறகு, இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டபோது, ​​சிறுவன் காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Tags :

Share via