காஷ்மீர், டெல்லி மாநிலங்களில்  சீக்கிய அமைப்பினர் போராட்டம் 

by Editor / 28-06-2021 05:35:17pm
காஷ்மீர், டெல்லி மாநிலங்களில்  சீக்கிய அமைப்பினர் போராட்டம் 



சீக்கிய பெண்களை துப்பாக்கி முனையில் கடத்தி, அவர்களை மிரட்டி மாற்று மதத்தைச் சேர்ந்த வயதானவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக ஜம்மு காஷ்மீரில் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசத்தில் இருப்பது போன்று மதமாற்ற தடுப்பு சட்டத்தை காஷ்மீரில் அமல்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஜம்மு காஷ்மீரில்  சீக்கிய மதத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, அவர்களை மாற்று மதத்தைச் சேர்ந்த வயதானவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் மஞ்சிந்தர் சிர்சா குற்றம்சாட்டி உள்ளார்.
சிர்சாவின் குற்றச்சாட்டை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் சீச்கியர்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே கருத்தை வலியுறுத்தி தலைநகர் டெல்லியிலும் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via