ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது.

by Staff / 26-10-2023 01:16:27pm
 ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது.

மதுரை மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்த நபர் ரேஷன் அரிசி கடத்தியதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மதுரை மேல அனுப்பானடி ஜெ. ஜெ. நகரில் வசிக்கும் கதிர்வேல் (45), என்பவரது மில்லில் 16 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை உணவுபொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே கதிர்வேல் 7750 கிலோ ரேஷன் கோதுமை கடத்தல் வழக்கு, 51, 300 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு, 2660 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் போன்ற பல வழக்குகளில் கைதானது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பரிந்துரையின்படி கதிர் வேலை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டார்.

 

Tags :

Share via