குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

by Editor / 26-05-2021 05:36:47pm
 குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு


தென்காசி பகுதிகளில் பெய்த பலத்த மழையினால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. செவ்வாய்  இரவு 10 மணி முதல் விடிய விடிய பெய்த பலத்த மழையினால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழையினால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவிசிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.
இதனால் பழைய குற்றாலம் அருவியில்  கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் வெள்ளப் பெருக்கெடுத்து அருவி பகுதியை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  கொரோனா வைரஸ் பரவலால் முழு ஊரடங்கை முன்னிட்டு குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் அருவிகளில்தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அனைத்து அருவிகளுக்கும் செல்லும் பாதைகள் தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும்அந்த பகுதிக்கு செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து அருவி பகுதிகளிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

Tags :

Share via