ஹோம் ஒர்க் நோட் எங்கே ? பள்ளி மாணவனை கம்பால் சரமாரியாக தாக்கிய பள்ளி ஆசிரியை

by Admin / 28-11-2023 09:18:08am
ஹோம் ஒர்க் நோட் எங்கே ? பள்ளி மாணவனை கம்பால் சரமாரியாக தாக்கிய பள்ளி ஆசிரியை

ஹோம் ஒர்க் நோட் எங்கே ? பள்ளி மாணவனை கம்பால் சரமாரியாக தாக்கிய பள்ளி ஆசிரியை - காயம் அடைந்த மாணவன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை - ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள களப்பான்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன்.இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு சந்தோஷ் (13),  மதுமிதா(12) என 2குழந்தைகள் உள்ளன. கணேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட கவிதா கோவில்பட்டியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறார் ‌ கவிதாவின் மூத்த மகன் சந்தேஷ் கழுகுமலையில் உள்ள ஆர்.சி.சூசை மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான். 

கடந்த 22ந்தேதி சந்தோஷ் பள்ளிக்கு வழக்கம் போல சென்றுள்ளார். அப்போது வகுப்பில் இருந்த சமூகவியல் ஆசிரியை ரெமிலா(49), மாணவர்களிடம் ஹோம் ஒர்க் போட்(வீட்டுப்பாட நோட்)  கேட்டுள்ளார். சந்தோஷ் உள்பட அனைத்து மாணவர்களும் தங்கள் செய்த வீட்டுபாடங்களை ஆசிரியை ரெமிலாவிடம் காண்ப்பித்து கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் அனைவரும் பிரத்தனைக்கு சென்றுள்ளனர். பிரத்தனை முடிந்து வந்ததும் மாணவர் சந்தோஷ்யிடம் ஹோம் ஒர்க் நோட்டை எடுத்து வரும்படி ஆசிரியை ரெமிலா கூறியுள்ளார். இதையடுத்து மாணவர் சந்தோஷ் தனது பேக்கில் நோட்டை பார்த்தபோது, அது காணாமல் போய் இருந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய நோட்டை காணவில்லை, என்று மாணவர் சந்தோஷ் ஆசிரியை ரெமிலாவிடம் கூறியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த ஆசிரியர் ரெமிலா ஹோம் ஒர்க் செய்யாமல் பொய் சொல்கிறாயா ? என்று கம்பால் மாணவர் சந்தோஷை அடித்துள்ளார். இதில் மாணவர் சந்தோஷுக்கு கை மற்றும் முதுகில் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் மாணவர் சந்தோஷ் கழுத்தைப் பிடித்து அடிக்க முயன்றுள்ளார் ஆசிரியை ரெமிலா, இதை மாணவர் தடுக்கவே,, அவருடைய சட்டையை பிடித்து வெளியே தள்ளியது மட்டுமின்றி, எனக்கு இருக்கும் கோபத்தில் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று ஆவேசத்துடன் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் மாணவர் சந்தோஷின் தாயார் கவிதாவுக்கு , ஆசிரியை ரெமிலா போன் செய்து உங்கள் மகன் ஹோம் ஒர்க் செய்யவில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து மாணவர் சந்தோஷம் தயார் கவிதா பள்ளிக்கு வந்து, பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தது மட்டுமின்றி , கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சமாதானமாக செல்லும்படி கூறியதாக தெரிகிறது.

இதை எடுத்து கவிதா சைல்ட் லைனுக்கு மூலமாக புகார் கொடுத்துள்ளார். அவர்களும் நேரில் வந்து விசாரணை நடத்தியதில் ஆசிரியை தாக்கியது தெரியவந்துள்ளது.

இதில் காயம் அடைந்த மாணவர் சந்தோஷ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கவிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியை ரெமிலா மீது கழுகுமலை காவல்துறையினர் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்பள்ளியில் மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து கல்வித்துறை சார்பில் குழு அமைத்து உண்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பள்ளியில் பயிலக்கூடிய பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

பேட்டி:1. சந்தோஷ் - ஆசிரியை ரெமிலாவல் தாக்கப்பட்ட மாணவர்

2.கவிதா - மாணவர் சந்தோஷின் தாயார்

3. காளிராஜ் - ஆசிரியர் பாலமுருகனால் தாக்கப்பட்டவர்

 

ஹோம் ஒர்க் நோட் எங்கே ? பள்ளி மாணவனை கம்பால் சரமாரியாக தாக்கிய பள்ளி ஆசிரியை
 

Tags :

Share via