தனியார் பள்ளியில் பயின்று வந்த இரண்டு மாணவிகள் மாயம் போலீசார் விசாரணை.

by Admin / 28-11-2023 09:15:09am
 தனியார் பள்ளியில் பயின்று வந்த இரண்டு மாணவிகள் மாயம்  போலீசார் விசாரணை.

கழுகுமலை  தனியார் பள்ளியில் பயின்று வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி  பேச்சியம்மாள் மற்றும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சாருமதி என்ற மாணவியும் சனிக்கிழமை பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு செல்லவில்லை. வீட்டிற்கு மாணவிகள் வருவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த பெற்றோர்கள் வெகு நேரமாகியும் மாணவிகள் வீட்டிற்கு வராததால் பள்ளிக்கு சென்று விசாரணை செய்துள்ளனர் அப்பொழுது மாணவிகள் பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்கு சென்றுவிட்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர் தொடர்ந்து பதற்றம் அடைந்த பெற்றோர்கள் மாணவிகளின் நண்பர்கள் வீட்டு மற்றும் உறவினர் வீடுகளில் இரண்டு நாட்களாக தேடி பார்த்துள்ளனர். அங்கும் அவர்கள் இல்லாத காரணத்தினால் கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளனர்.  கழுகுமலை காவல் நிலைய போலீசார் கழுகுமலை பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மாணவிகளை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via