மான் வேட்டைக்காக வைக்கப்பட்ட சுருக்கு கம்பியில் சிக்கி ஆண் புலி உயிரிப்பு 7 பேர் கைது.

by Editor / 28-07-2023 10:33:50am
மான் வேட்டைக்காக வைக்கப்பட்ட சுருக்கு கம்பியில் சிக்கி ஆண் புலி உயிரிப்பு 7 பேர் கைது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதிகளில் 25 க்கும் மேற்பட்ட புலிகள் வசிப்பதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.இதனகாரணமாக அரசு இந்த புலிகள் காப்பகத்தின் மீது தனிக்கவனமெடுத்து கண்காணித்துவருகிறது.இந்தநிலையில் இந்தவனப்பகுதியில் மான்வேட்டைகளை உள்ளூர் பகுதிகளைசேர்ந்த கும்பல்கள் நடத்திவருவதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் இயற்கை ஆர்வலர்களால் கூறப்பட்டு வரும்  நிலையில் பவானிசாகர் வனப்பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஐந்து வயதுடைய ஆண் புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் மான் வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட சுருக்கு கம்பியில் புலி சிக்கி இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்தநிலையில் இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக பவானிசாகர் வனப்பகுதியில் சுருக்கு கம்பிகள் வைத்த சுஜில்குட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏழு பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via