ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை-ஆட்சியர் கார்மேகம் தகவல்.

by Editor / 28-07-2023 10:37:48am
ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை-ஆட்சியர் கார்மேகம் தகவல்.

வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா வருகிறது.இது தவிர அன்று சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் ஆகும்.இந்த நாட்களை அடுத்து உள்ளூர் விடுமுறை வருகிற 3ஆம் தேதி விடப்படுகிறது .இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது,

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி பெருக்கு விழா வருகிற 3ம் தேதி வருகிறது. ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு வருகிற 3ஆம் தேதி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு அன்றைய தினம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் .

இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு வருகிற 19ஆம் தேதி ஈடு கட்டும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via