பிரதமர் வருகையை முன்னிட்டு 5,000 போலீசார் குவிப்பு

by Staff / 26-02-2024 02:26:17pm
பிரதமர் வருகையை முன்னிட்டு 5,000 போலீசார் குவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 28ஆம் தேதி நெல்லை மாவட்டட் பாளையங்கோட்டை தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் பாஜக சார்பில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரதமர் வருகையை முன்னிட்டு நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மொத்தம் 5,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via