கர்நாடகாவில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவர்கள் இரண்டு பேர் பலி
கர்நாடகாவில் தட்சிண கன்னடாவில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும் நிலையில் .சுப்பிரமணிய கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு ஸ்ரீ சுப்ரமணிய கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags :