பாதுகாப்பு கணக்கு சேவை அதிகாரிகளுடன் ஆளுநா் கலந்துரையாடல்

by Staff / 20-09-2023 01:28:05pm
பாதுகாப்பு கணக்கு சேவை அதிகாரிகளுடன் ஆளுநா் கலந்துரையாடல்

இந்திய பாதுகாப்பு கணக்கு சேவை பயிற்சி அதிகாரிகளுடன் ஆளுநா் ஆா். என். ரவி கலந்துரையாடினாா். ஆளுநா் ஆா். என். ரவி 'எண்ணித் துணிக' நிகழ்வு மூலம் பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து ஆக்கபூா்வமான ஆலோசனைகளை வழங்கி வருகிறாா். அதன்படி சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்திய பாதுகாப்பு கணக்கு சேவை பயிற்சி அதிகாரிகள் மத்தியில் ஆளுநா் உரையாற்றினாா். அப்போது, பாரதத்தின் சகாப்த மாற்றத்தை உணா்ந்து நமது தேசத்துக்கு சிறப்பாக சேவை செய்ய சா்வதேச பாதுகாப்பு சூழலை தொழில்முறை ரீதியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றாா். இந்த நிகழ்வில் ஆளுநரின் தனிச்செயலா் ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டீல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

 

Tags :

Share via