பாம்பனில் கடலில் இறங்கி மனிதச்சங்கிலி போராட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைதாகி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராமேஸ்வரம், பாம்பனில் கடலில் இறங்கி நாளை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்த நிலையில், மீனவர்கள் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
Tags :