உதயநிதி தாக்கல் செய்த மனு.. இபிஎஸ் பதிலளிக்க உத்தரவு
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக மானநஷ்ட வழக்கை நிராகரிக்கக்கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக்கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே போல் இபிஎஸ் பற்றி பேச உதயநிதிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை மார்ச் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags :