பல்கலைகழகத்தில் துப்பாக்கி சூடு - 15 பேர் பலி
பிராக் நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று யாரும் எதிர்பார விதமாக துப்பாக்கி சூடு நடைப்பெற்றது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்திய நபரை கைது செய்தனர். துப்பாக்கி சூடு நடத்தும் முன் தனது தந்தையை கொன்றதாக அந்த நபர் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பல்கலைகழகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார் அவரது நோக்கம் என்ன என்பது குறித்தான தொடர் விசாரணையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.
Tags :