வரி செலுத்தவில்லை என்றால் சீல் வைப்போம்... ஷாப்பிங் மாலில் பேனர் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்...

by Admin / 28-08-2021 01:49:26pm
வரி செலுத்தவில்லை என்றால் சீல் வைப்போம்...  ஷாப்பிங் மாலில் பேனர் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்...

கோடிக்கணக்கில் வரி செலுத்தாத வணிக வளாகத்தில், மாநகராட்சி அதிகாரிகள் பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
சென்னை பெரம்பூரில்  இயங்கி வரும் பிரபல மாலில், 50க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்களின் கடைகள் இயங்கி வருகின்றன. இதில், திரை அரங்கம் உள்ளிட்ட 10 பெரிய நிறுவனங்கள் சார்பில், ஒரு கோடியே 23 லட்சம் ரூபாய் வரி பாக்கி இருப்பது தெரியவந்தது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக கட்டடத்திற்கு சொத்து வரியும் கட்டாமல் உள்ளனர்.
 
இதுகுறித்து மாநகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாததால், கட்டிடத்தின் வாயிலில் பிரமாண்ட பேனரை மாநகராட்சி அதிகாரிகள் தொங்க விட்டனர்.

மேலும், மூன்று நாட்களுக்குள் வரி செலுத்தவில்லை என்றால், வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்ததோடு, வணிக வளாகத்தின் மின் இணைப்பையும் துண்டித்தனர்.

 

Tags :

Share via

More stories