தறிகெட்டு ஓடிய லாரி - தலை நசுங்கி பலி

by Staff / 29-04-2023 11:11:42am
தறிகெட்டு ஓடிய லாரி - தலை நசுங்கி பலி

திருப்பூரில் குமரன் சாலையில் மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரியானது கட்டுப்பாடை இழந்து அப்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த 15 இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு கார்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த மூன்று பேரும் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். லாரியில் அதிக எடை ஏற்றியதே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via