இந்தியா கூட்டணி மன்னிப்பு கோர வேண்டும் - ராஜ்நாத் சிங்

by Staff / 04-09-2023 04:17:29pm
இந்தியா கூட்டணி மன்னிப்பு கோர வேண்டும் - ராஜ்நாத் சிங்

சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில், இந்தியா கூட்டணி மன்னிப்பு கோர வேண்டும் என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “திமுக சனாதன தர்மத்தை தாக்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி மெளனமாக உள்ளது. இந்தியா கூட்டணி இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via