தமிழகத்தில் நவம்பர் 30ஆம் தேதி வரை மிதமான மழை
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (28-11-2022) திங்கட்கிழமை தமிழகம், புதுச்சேரியின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் நவம்பர் 30ஆம் தேதி வரை மிதமான மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சம் 31 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :