16 கிராம மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

by Editor / 07-12-2022 08:45:06am
16 கிராம  மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக சீர்காழி தாலுகா பகுதியை சேர்ந்த 16 மீனவ கிராமம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல் பூம்புகார், வானகிரி உள்ளிட்ட 16 மீனவர் கிராமம் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2500க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் நாட்டுப் படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via