48 மீனவர்களை நெடுந்தீவு அருகே சிறைப்பிடித்த இலங்கை கடற்படை.

by Editor / 19-12-2021 09:49:27am
48 மீனவர்களை நெடுந்தீவு அருகே சிறைப்பிடித்த இலங்கை கடற்படை.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் அனுமதி சீட்டை பெற்றுக் கொண்டு கடலுக்குச் மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, வழிமறித்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி, 48 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும், 6 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்து கொண்டு செண்டுள்ளனர்.மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 48 மீனவர்களையும், 6 விசைப்படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

Tags : Sri Lankan Navy captures 48 fishermen near Nedundeevu

Share via