தொடரும் சோகம் 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.

by Editor / 19-12-2021 12:27:10am
தொடரும் சோகம்  11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.

சென்னை மாங்காடு சக்தி நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில், மூத்த மகள் தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இரண்டாவது மகள் பூவிருந்தவல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், அறைக்குள் சென்ற இரண்டாவது மகள் வெகு நேரமாகியும் வரவில்லை.  இதனையடுத்து அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்கத் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த சில தினங்களாக அந்த மாணவி நெருக்கமான தோழிகளிடம் பேசாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இவர் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில் பாலியல் தொல்லைக்கு ஆளானது போன்று எழுதி வைத்து இருந்தார். அந்தக்கடிதத்தில் முழுக்க முழுக்க பாலியல் குறித்து மனம் வெறுத்து எழுதிய வரிகள் காணப்டுகின்றன.மேலும் டீச்சர், மாணவர்கள் ரிலேஷன்ஷிப்பை  நம்ப வேண்டாம் எனவும் பாதுகாப்பான இடம் கல்லறையும் ,தாயின் கருவறையும் என உருக்கமாக எழுதியுள்ளார்.மாணவியன் தற்கொலைக்கு காரணம்  குறித்து  போலீசார் விசாரித்து வருகின்றனர். 

 

Tags : 11th class student commits suicide due to sexual harassment

Share via