உலக சாதனை பேரணி:திமுக பிரச்சாரம். நாலு பிரிவின் கீழ் வழக்கு பதிவு
தென்காசியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் 8051 பேர் கலந்து கொண்ட உலக சாதனை பேரணி ஆறாம் தேதி அன்று நடைபெற்றது. இந்தப் பேரணியின் போது திமுக நாடாளுமன்ற வேட்பாளரான ராணி ஸ்ரீ குமாருக்கு வாக்கு கேட்டு அந்த வழியேசென்ற பிரச்சார வாகனத்தில் ஒளி பெருக்கிகள் மூலம் ஒளிபரப்பப்பட்டதை தொடர்ந்து பறக்கும் படை அலுவலர் மாரியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தென்காசி போலீசார் திமுக பிரச்சார வாகனத்தை ஓட்டிய மற்றும் பிரச்சார வாகனத்தில் பேசி சென்ற நபர் உள்ளிட்டவர்கள் மீது தேர்தல் விதிமுறை மீறல் உள்ளிட்ட நாலு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags : உலக சாதனை பேரணி:திமுக பிரச்சாரம் நாலு பிரிவின் கீழ் வழக்கு பதிவு