ராகுல் காந்தி சனிக்கிழமை அன்று தமிழகத்தில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை அன்று தமிழகத்தில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார் காலை 11:30 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் பொன்னேரி சென்றடைந்து அங்கு காங்கிரஸ் வேட்பாளர் துறை சந்திரசேகரனை ஆதரித்து உரையாற்றுவதோடு அதனை தொடர்ந்து சோளிங்கர் தொகுதிக்கு சென்று காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார் .மாலை 3.00 மணி அளவில் திருச்சியில் உள்ள துறையூர் தொகுதிக்கு சென்று காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத்தை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 20 ஆம் தேதி அன்று மீண்டும் தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்.
Tags :


















