தமிழக கட்சி கழக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்க சென்றுள்ளார்.

by Admin / 06-05-2026 03:10:43pm
 தமிழக கட்சி கழக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்க சென்றுள்ளார்.

 தமிழக கட்சி கழக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்க சென்றுள்ளார். அவருடன் கட்சியை பொதுச் செயலாளர் என் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன்  அருண் ராஜ்,நிர்மல்குமாா், சென்று உள்ளனர். காலையில் புதிய அமைச்சரவைக்கான பதவியேற்ப்பிற்காக தலைமைச் செயலகத்திற்கு செங்கோட்டையன் சென்று சட்டமன்ற செயலரை சந்தித்தார். நாளை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் ஆக விஜய்யும் அவரோடு முக்கியமானவர்கள் அமைச்சர்களாகவும் பதவி ஏற்க உள்ளனர். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆட்சியில் பங்கு வகிப்போம் என்கிற கருத்தை வெளியிட்டார்.

 

 

Tags :

Share via
Logo