வரலாற்றில் சிவப்பு எழுத்து தினம் இன்று- பினராயி விஜயன்
ஒன்றிய அரசு நிதி வழங்களில் தென்மாநிலங்களை வஞ்சிக்கிறது என்று இன்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேரளா முதல்வர் பினராயி விஜயன், இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க நாம் இங்கு ஒன்றிணைந்துள்ளோம். அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்துவதை உறுதிசெய்வதை வலியுறுத்தியே இந்த போராட்டம். பிப்ரவரி 8 ஆம் தேதியான இன்று வரலாற்றில் சிவப்பு எழுத்து தினமாக இருக்கும் என்று தெரிவித்தார். நேற்று கர்நாடக முதல்வர்ரும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Tags :