வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம். 

by Admin / 11-09-2023 11:14:22pm
வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம். 

மினி பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி  - கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம். 

கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த காலங்களில் செண்பகப்பெரி கிராமத்திற்கு 5 மினிப் பேருந்துகள் போக்குவரத்திற்காக வசதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு மினி பேருந்து மட்டுமே இயங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், உட்பட கிராம மக்கள் தகுந்த நேரத்திற்கு பேருந்து இல்லாமல் இன்னலுற்று வருகின்றனர். எனவே ஐந்து பேருந்துகளையும் முறையாக செண்பகப்பேரி கிராமத்திற்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை முழங்கினர். மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் மந்தித்தோப்பு பாபு தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு சேதுராமலிங்கம், நகர செயலாளர் சரோஜா, மாவட்ட குழு பரமராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான  கிராம மக்கள்   கலந்து கொண்டனர். தொடர்ந்து மோட்டார் ஆய்வாளர் சுரேஷ்விஸ்வநாத்திடம் மனுவை வழங்கினர்.

வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம். 
 

Tags :

Share via