13 வயது சிறுமி கர்ப்பம்.. பிளஸ் 2 மாணவன் கைது
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இச்சிறுமியும், அதே பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவனும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், சிறுமிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு, அவரது தாய் அழைத்து சென்றார். அங்கு, பரிசோதனையில் சிறுமி எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. சிறுமியின் தாய் புகாரின்படி, எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, சிறுமி கர்ப்பத்திற்கு காரணமான, 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
Tags :