நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து சோதனை ஓட்டம்

by Staff / 08-08-2024 12:59:16pm
நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து சோதனை ஓட்டம்

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதையொட்டி இன்று (8ம் தேதி) சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின்னர் தொடங்கப்படவுள்ளது. மேலும், இந்த சோதனை ஓட்டத்திற்கு பிறகு sailindsri.com என்ற இணையதளத்தில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via