மொபைல் வெடித்து சிறுமி பலியான வழக்கில் திடீர் திருப்பம்

by Staff / 18-11-2023 12:10:15pm
மொபைல் வெடித்து சிறுமி பலியான வழக்கில் திடீர் திருப்பம்

கேரளாவின் திருச்சூர் - திருவில்வமலையில் மொபைல் போன் வெடித்து ஆதித்யஸ்ரீ (8) என்ற சிறுமி உயிரிழந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள தடயவியல் பரிசோதனையின் முடிவுகள், குழந்தையின் விபத்து மரணத்திற்குக் காரணம் தொலைபேசி வெடித்ததால் அல்ல என்றும், அறைக்குள் இருந்த வேறு சில வெடிபொருட்கள் வெடித்ததே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து ஏழு மாதங்களுக்குப் பிறகு தடயவியல் அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் உட்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டிற்குள் பன்றியைக் கொல்ல வைத்திருந்த வெடிபொருட்கள் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via