பாமக பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது

by Staff / 29-08-2023 05:01:01pm
பாமக பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது

பாமக 35வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது எனவும் விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் நடத்திக்கொள்ளலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்கூட்டம் நடத்தும் உரிமையை தடுக்க முடியாது. ஆனால், காவல்துறை தரப்பு வாதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாது என கட்சியினரை வழி நடத்த வேண்டும். கட்சி தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், பாமக வழக்கறிஞர் பாலு, கடலூரில்தான் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். வேறு மாவட்டத்தில் நடத்த விருப்பமில்லை. இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via