மது போதைக்கு அடிமையானவர் தூக்கு போட்டு தற்கொலை

by Staff / 13-07-2023 04:54:30pm
மது போதைக்கு அடிமையானவர் தூக்கு போட்டு தற்கொலை கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி என்பவரின் மகன் 31 வயதான ரஞ்சித் குமார், பெயிண்டராக பணிபுரிந்து வந்தார், இவருக்கும் அவரது மனைவி காயத்ரிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஞ்சித் குமார் அவரது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார், ரஞ்சித் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது,மனைவியை பிரிந்ததால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த ரஞ்சித் குமார் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்  
 

Tags :

Share via