இலஞ்சியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் திருத்தேரோட்டம்

by Staff / 22-04-2024 01:43:52pm
 இலஞ்சியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் திருத்தேரோட்டம்

தென்காசி அருகே இலஞ்சியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் ஒன்றான இலஞ்சி குமாரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை மாதம் தோறும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சித்திரை மாதத்திற்கான திருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி திருவீதி உலா, சுவாமி அலங்காரம் ஆராதனை மற்றும் வெள்ளி சப்பரம் வீதி உலா உள்ளிட்டவைகள் நடைபெற்று வந்தது.

இதனை தொடர்ந்து ஒன்பதாம் திருவிழாவான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து இலஞ்சி முருகன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து திருத்தேரை இழுத்தனர். மேலும் சுவாமி அம்பாள் திருத்தேராட்டமும் நடைபெற்றது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருத்தேரானது பழுதடைந்த நிலையில் தற்போது புதிய தேர் வடிவமைக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் திருத்தேரோட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via