மத்திய சிறையில் உள்துறை கூடுதல் செயலாளர் அமுதா ஆய்வு

by Staff / 13-07-2023 04:59:39pm
மத்திய சிறையில் உள்துறை கூடுதல் செயலாளர் அமுதா ஆய்வு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட உள்ள நிலையில், மேட்டுப்பாளையம் பிளிச்சி பகுதியில் புதிதாக சிறைச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் அமுதா வருகை புரிந்திருந்தார். கோவை மத்திய சிறை வளாகத்திற்குள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் தற்பொழுது கோவை மத்திய சிறையில் உள்ள வசதிகள், பாதுகாப்பு வசதிகள், இங்கு சிறைவாசிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.முன்னதாக மேட்டுப்பாளையம் பிளிச்சி பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், கோவை மத்திய சிறைதுறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.இந்நிகழ்வில் சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளாவிற்கு உள்துறை கூடுதல் செயலாளர் அமுதா புத்தகங்களை வழங்கினார்.    
 

Tags :

Share via