மருத்துவ கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்

by Staff / 07-11-2022 11:41:52am
மருத்துவ கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது. இந்த கலந்தாய்வில் 5647 எம்பிபிஎஸ் இடங்களும், 1389 பிடிஎஸ் இடங்களும் நிரம்பியுள்ளன. மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு மாணவ ,மாணவிகளுக்கு இடங்களை ஒதுக்கி ஆணை வழங்கப்பட்டது. முதல் சுற்று கலந்தாய்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்றே கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. எம்.எம்.சி., ஸ்டான்லி, கே.எம்.சி, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதேபோல், கோவை பி.எஸ்.சி. தனியார் கல்லூரியை அதிக மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via