பெண்ணின் அந்தரங்கப் படங்களை பரப்பிய நபர் கைது

by Staff / 06-06-2024 01:28:47pm
பெண்ணின் அந்தரங்கப் படங்களை பரப்பிய நபர் கைது

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் முகநூல் மூலம் நட்பாக பழகிய பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பிய வழக்கில் இளைஞரை போலீசார் கைது செய்தனர். எருமேலி கரிநிலம் புதுபரத்தில் பகுதியைச் சேர்ந்த சுஜின்பாபு (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் முண்டக்காயம் போலீசார் குற்றவாளியை பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via