பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை... உதவி ஆசிரியரின் வீட்டில் துணிகரம்.

by Admin / 25-08-2021 11:52:05am
பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை... உதவி ஆசிரியரின் வீட்டில் துணிகரம்.

திண்டிவனம் அருகே உதவி தலைமை ஆசிரியரின் வீட்டின் கதவை உடைத்து முப்பத்தி நான்கரை சவரன்  தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
 
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த, கண்ணன் நகரைச் சேர்ந்தவர் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி நாகம்மாளும் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இருவரும் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியயடைந்துள்ளனர்.
 
பின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த முப்பத்தி நான்கரை சவரன்  தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

உடனடியாக ஜெயபிரகாஷ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கைரேகை மற்றும் மோப்பநாய் உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via