ஆட்டோ மீது லாரி மோதி விபத்து - 5 பேர் பலி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். நகருந்தரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்தவர்களது சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காயமடைந்தவர்கள் கட்வாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Tags :