ஐ.ஏ.எஸ்.அதிகாாிகள் மாற்றம்.சேலம் மாவட்ட ஆட்சியராக இளம் பகவத் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தமிழக அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து உத்தரவு. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்து தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்ட கே. இளம் பகவத் சேலம் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். விஜயகுமார் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு துறை செயலாளராகவும் அருண்ராஜ் உயர்கல்வித்துறை செயலாளராகவும் சித்தீக் நிதித்துறை செயலாளராகவும் முருகானந்தம் வருவாய் நிர்வாக ஆணையராகவும் சுவர்ணா சுற்றுலா வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை செயலாளராகவும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக சுப்பையன் நியமிக்கப்பட்டுள்ளார் டெல்லி தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையராக ஜெயா நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை ஆணையராக சமூகமும் தமிழ் வளர்ச்சி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனராக அருண் தம்பு ராஜூவும் பிரிந்த தேவி கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குனராகவும் தமிழ்நாடு குடிமை பொருள் விநியோக கழக தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் காரணமாக நிர்வாகத் துறையில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டு வருகின்றன.
Tags :



















